முக்கிய செய்திகள்

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள பெருமுகை கிராமம் கரும்பாறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் வனத்துறை சார்பில் எச்சரிக்கை

நம்பியூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெய்த கனமழையால் நம்பியூரில் 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது

நம்பியூர் பழனிகவுண்டன் புதூர் பகுதியில் தரைமட்ட பாலத்தை மூழ்டித்து செல்லும் நிலையில் ஆபத்தை உணராமல் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவரை பொதுமக்கள் கயிறு கட்டி மீட்டனர்.

நம்பியூர் பகுதியில் குளம் உடைந்து அதிகளவு தண்ணீர் வெளியேறி வருவதால் தாழ்வான இடங்களில் உள்ள பொதுமக்கள் மேலான இடங்களுக்கு செல்ல காவல்துறை சார்பில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை

கோபி அருகே உள்ள சஞ்சீவிராயன் கோவில் அருகே கரும்பு காட்டிற்குள் சிறுத்தை நடமாட்டத்தால் அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர்

கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு காவல் நிலையத்தில் தமிழக மதுவிலக்கு பிரிவு ஐஜி மயில்வாகனன் ஆய்வு மேற்கொண்டார்.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா சென்று விட்டு வீடு திரும்ப வழியில் சுற்றுலா மேல் மரத்தின் மீது மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் உட்பட 18 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்

கோபி அருகே உள்ள கோவை பிரிவில் கேரளாவை சேர்ந்த வியாபாரியிடம் உரிய ஆவணம் இல்லாமல் இருந்த 98 ஆயிரத்து 500 ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

கோபி அருகே உள்ள கெட்டிசெவியூரில் தேர்தல் கண்காணிப்பு நிலைக்குழுவினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல்
