கோபி அருகே உள்ள கெட்டிசெவியூரில் தேர்தல் கண்காணிப்பு நிலைக்குழுவினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உதவ தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.கோபி அருகே உள்ள கெட்டிசெவியூர் சுள்ளிக்கரடு என்ற இடத்தில் தேர்தல் கண்காணிப்பு நிலைக்குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது கவுந்தப்பாடி அருகே உள்ள ஆலத்தூரில் இருந்து ரியல் எஸ்டேட் உரிமையாளர் விஷ்வநாதன் என்பவரின் மகன் தனசேகரன் என்பவரது காரை நிறுத்தி சோதனை செய்தனர்.சோதனையில் காரில் உரிய ஆவணம் இல்லாமல் ஒரு லட்சம் ரூபாய் இருப்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து தனசேகரிடம் நடத்திய விசாரணையில், திருப்பூரில் வாங்க உள்ள இடத்திற்கு முன் பணம் செலுத்த சென்று கொண்டு இருப்பது தெரிய வந்தது.ஆனால் பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாமல் இருந்ததை தொடர்ந்து ஒரு லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த கண்காணிப்பு நிலைக்குழுவினர், கோபியில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்ணப்பனிடம் ஒப்படைத்தனர்.