ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த தைலாம்பாளையம் என்ற இடத்தில் நேற்று மாலை தேர்தல் பறக்கும்படையினர் மற்றும் வரப்பாளையம் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது திருப்பூரில் இருந்து மலையப்பாளையம் நோக்கி வந்த மலையப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் 39, என்பவரின் காரை சோதனை செய்தனர். அப்போது உரிய ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட ரூ.2.4 லட்சத்தை அவரிடம் இருந்து பறிமுதல் செய்து கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் அவரிடம் தெரிவித்தனர்.