கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொங்கர்பாளையம்,மற்றும் மோதூர்,உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக, வீடுகளில் வளர்க்கப்பட்டுவரும் கால்நடைகளை மர்;ம விலங்கு வேட்டையாடி வந்தது,அது குறித்து அப்பகுதி பொதுமக்கள் டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு அளித்த தகவலின் படி வனத்துறையினர் சம்பவம் நடந்த இடங்களில் சிசிடிவி கேமராக்கள் வைத்து கண்காணித்து வந்தனர்,இந்நிலையில் கடந்த 23 ம் தேதி அன்று கொங்கர்பாளையம் பகுதியை சேர்ந்த ராமசாமி என்பரது தோட்டத்தில் கன்றுகுட்டி ஒன்றை இறந்த நிலையில் கிடந்துள்ளது,இது குறித்து ராமசாமி அளித்த தகவிலின் படி சம்பவ இடத்திற்க்கு சென்ற டி.என்.பாளையம் வனத்துறையினர் கால்தடங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து சிறுத்தையின் கால்தடங்கள் பதிவான இடங்கள் மற்றும் அருகில் உள்ள விவசாய தோட்டம் என 5 இடங்களில் கேமாரக்கள் பொருத்தப்பட்டு சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்இந்த நிலையில் வனத்துறையினர் பொருத்திய கேமராவில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரிய வந்தது,அதனைதொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை பிடிக்க ராமசாமி என்பரது வீட்டிற்க்கு அருகே வனத்தை ஒட்யுள்ள பகுதியில் கூண்டு வைத்து கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.