நம்பியூர் பழனிகவுண்டன் புதூர் பகுதியில் தரைமட்ட பாலத்தை மூழ்டித்து செல்லும் நிலையில் ஆபத்தை உணராமல் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவரை பொதுமக்கள் கயிறு கட்டி மீட்டனர்.

The public rope was built until he tried to cross the road in a two-wheeler without feeling the danger of mopping the ground bridge in the Nambiyur Fruitikoundan shrub area.

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 3 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்துத, இந்த கன மழை காரணமாக நம்பியூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குளம் குட்டைகள் நிரம்பி நீர் வழித்தடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது

1716360168922758 0

இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக நம்பியூர் பழனிகவுண்டர்புதூர் – கெடாரை செல்லும் வழியில் உள்ள தரைமட்ட பாலத்தை மூழ்கடித்து வெள்ளநீர் சென்று வருகிறது

1716360163889424 1

இந்த தரைப்பாலத்தில் ஆபத்தை உணராமல் வாகன ஓட்டி ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார், வெள்ள நீர் அதிகளவு சென்றதால் இரு சக்கர வாகனத்துடன் அந்த நபரை வெள்ள நீர் எடுத்துச் சென்றது.
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை கயிறு மூலமாக மீட்டனர்.தொடர்ந்து கனமழை காரணமாக நம்பியூர் பருத்திக்காட்டுபாளையம் பகுதியில் நீர்வழி தடத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த தடுப்புச் சுவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டது

ஆபத்தை உணராமல் வெள்ள நீர் மூழ்கடித்துச் செல்லும் தரைப்பழத்தை கடக்க முயன்ற வாகன ஓட்டி நேரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment