கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள பெருமுகை கிராமமான கரும்பாறை முதல் சஞ்சீவிராயன் குளம் நீர் வழித்தடத்தில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் அந்தியூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அந்தியூர் வனத்துறையினர் கரும்பாறை முதல் சஞ்சீவிராயன் குளம் நீர் வழித்தடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு சிறுத்தையின் கால் தடங்கல் பதிவாகியுள்ளது தெரியவந்தது

தொடர்ந்து கரும்பாறை சஞ்சீவிராயன்குளம் மற்றும் அதன் நீர் வழித்தடங்கள் செல்லும் பகுதிகளில் குடியிருக்கும் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம் எனவும், தங்கள் வீடுகளில் வளர்க்கும் கால்நடைகளை பாதுகாப்பாக வைக்குமாறும், சிறுத்தையை கண்டால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்குமாறு தெரிவித்துள்ளனர்.

மேலும் காலை நேரங்களில் கரும்பாறை முதல் சஞ்சீவிராயன் குளம் வரையிலான நீர் வழித்தடங்களில் யாரும் கால்நடைகளை மேய்க்க செல்ல வேண்டுமென வனத்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.