சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பனியன் கம்பெனி தொழிலாளர்கள் 17 பேரும் பள்ளி மாணவர்கள் ஐந்து பேரும் விடுமுறையை முன்னிட்டு வேலை ஏரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்று முன்தினம் சுற்றுலாவாக வேனில் சென்றனர்.

வேனை அதே பகுதியைச் சேர்ந்த செல்வன் என்பவர் ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். ஊட்டியில் இருந்து திரும்பியவர்கள், கோபி அருகே உள்ள கொடிவேரிஅணைக்கு சென்றுள்ளனர். கொடிவேரி அணையில் குளித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

காசிபாளையம் – கணபதிபாளையம் பகுதியில் நான்கு வழி சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதால் வாகனங்கள் ஒரு வழிப்பாதையில் மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. வேன் கணபதிபாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த பைக் மீது மோதாமல் இருப்பதற்காக வேன் டிரைவர் செல்வன் வேனை சாலையின் வலதுபுறம் திருப்பிய போது, எதிர்பாராதமாக சாலையோரம் இருந்த ஆலமரத்தின் மீது மோதியது இதில் வேனில் இருந்த பள்ளி மாணவர்கள் 5 பேர் உட்பட 18 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். அதேபோன்று பைக்கில் சென்று கொண்டிருந்த காந்தி நகரைச் சேர்ந்த ஒருவரும், வேனில் இருந்த இரண்டு பேரும் படுகாயம் அடைந்த நிலையில் மூன்று பேரும் கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.