நம்பியூர் அடுத்த தைலாம்பாளையம் செக்போஸ்டில் தேர்தல் பறக்கும் படை நிலை கண்காணிப்பு குழுவினர் நேற்று முன் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது இருகாலூர், ஈஸ்வரன் கோவில் வீதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் முரளிகிருஷ்ணன் 21, என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் திருப்பூரில் இருந்து நம்பியூருக்கு செல்லும் பொழுது உரிய ஆவணம் இன்றி ரூ.56,800 எடுத்துச் சென்றது தெரிந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்து கோபி வட்டாட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.ராஜேந்திரன் பைனான்சில் வேலை செய்வதாக அதிகாரிகளிடம் கூறிய நிலையில், உரிய ஆவணம் கொடுத்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.