ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கரட்டுபாளையம் ஊராட்சி ஆயிபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சத்தியமங்கலம்–பெருந்துறை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்


இது குறித்து அப்பகுதி பொது மக்களை கேட்ட பொழுது எங்கள் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புதிய வடிகால் அமைத்து தார் சாலை அமைக்கும் பணி பூமி பூஜை நடைபெற்றது. அதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன


இந்நிலையில் ஆயிபாளையம் பகுதியைச் சேர்ந்த தனியார் ஒருவர் இப்பகுதியில் வடிவால் அமைக்க கூடாது பணியை தடுத்துள்ளார். இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து சத்தியமங்கலம் -– பெருந்துறை சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இச்ம்பவம் அறிந்து இடத்திற்கு வந்த நம்பியூர் காவல் ஆய்வாளர் நிர்மலா, வட்டார வளர்ச்சி அதிகாரி வரதராஜன் காவல் உதவி ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் பொதுமக்களுடன் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.



அப்போது உரிய நடவடிக்கை எடுத்து வடிகால் அமைக்கும் பணியை தொடர்ந்து செயல்படுத்தபடும் உறுதி கூறியதன் அடிப்படையில் பொதுமக்கள் சாலை மறியலை விலக்கிக் கொண்டு கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்களை அதிகாரிகள் மாற்று வழியில் திருப்பி அனுப்பினர்.
