கோபி அருகே உள்ள கோவை பிரிவில் ராஜேந்திரன் தலைமையில் தலைமை காவலர் சதீஸ்குமார், காவலர் அருள்சங்கர், பெண் காவலர்கள் தீபா, பாரதி ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோ ஒன்றை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் உரிய ஆவணம் இல்லாமல் 98 ஆயிரத்து 500 ரூபாய் இருப்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து சரக்கு ஆட்டோவில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் துவிட்டு பரம்பில் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (55) என்பதும், ஈரோட்டில் இருந்து வாழைத்தார் வாங்கி செல்வதற்காக பணத்துடன் வந்திருப்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பறக்கும் படையினர் கோபி தாலுகா அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்