கிரைம் செய்திகள்

கோபிசெட்டிபாளையம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் தகாத முறையில் நடக்க முயன்றவரை கோபி அனைத்து மகளீர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோபி அருகே உள்ள நம்பியூர் காவல் நிலைய முதல்நிலை காவலர் நிரந்தர பணி நீக்கம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவு.

கோபிசெட்டிபாளையம் அருகே வேலை வாங்கி தருவதாக கோவையில் இருந்து கோபிக்கு வரவழைத்து நண்பரின் மனைவிக்கு பாலியல் தொல்லை

கோபிசெட்டிபாளையம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்த 4 பேரை கோபி காவல்துறையினர் கைது செய்தனர்

கோபி அருகே கோயில் திருவிழாவில் ஆட்டு கிடாய் வெட்டி பச்சை ரத்தம் குடித்த பூசாரி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நம்பியூர் அருகே குருமந்தூர் மேட்டில் கலவை ஏற்றி வந்த லாரி தீடிரென மைய தடுப்பில் மோதி விபத்து, விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுநர் கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி..

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காமராஜ் நகரில் உள்ள அரசு மது கடை பாரில் ஏற்பட்ட தகராறில் இளைஞர்கள் பீர் பாட்டிலால் தாக்கியதில் மரக்கடை உரிமையாளர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோபி அருகே உள்ள கிராமத்தில் 15 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொள்வதாக கூறி வந்த வாலிபர் மீது கோபி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

கோபி மதுவிலக்கு காவல்நிலையத்திற்கு உட்பட்ட பவானி பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல். கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை கோபி மதுவிலக்கு காவல் துறையினர் கைது செய்தனர்.

டி.என்.பாளையத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக போலி ஆவணங்களை பயன்படுத்தி தங்கி இருந்த பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவரை பங்களாபுதூர் காவல்துறையினர் கைது

கோபி மாதேஸ்வரன் கோயில் வீதியில் குடிப் பழக்கத்தை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த கணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
