கோபி அருகே உள்ள நம்பியூர் காவல் நிலைய முதல்நிலை காவலர் நிரந்தர பணி நீக்கம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவு.

District Police Superintendent Order to dismiss the Nambur Police Station First-Second Guard near gobi

கோபி அருகே உள்ள நம்பியூர் காவல்நிலையத்தில் முதல் நிலை காவலராக கடந்த இரண்டு மாதங்களாக பூமாலை எனபவர் பணியாற்றி வந்தார். சேலம் மாவட்டத்தை சேர்ந்த பூமலை கடந்த 2009 ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்துள்ளார். அதைத்தொடர்ந்து ஈரோடு போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றிய போது ஆனலைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதை அவரது மனைவி கண்டித்து வந்துள்ளார். ஆனால் ஆன்லைன் சூதாட்டத்தை பூமாலை கைவிட மறுக்கவே, மனமுடைந்த அவரது மனைவி,குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்டார்.

இது தொடர்பான புகார் எழவே, பூமலை அந்தியூர் காவல் நிலையத்திற்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். கடந்த ஆண்டு அந்தியூரில் பணியாற்றிய போது, கடைகளில் தீபாவளி மாமூல் வசூல் செய்து உள்ளார். இதுகுறித்து சிசிடிவி ஆதாரங்களுடன் கடை உரிமையாளர்கள் புகார் தெரிவிக்கவே, பூமாலை தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
அதைத்தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் நம்பியூர் காவல் நிலையத்திற்கு பணிமாறுதல் செய்யப்பட்டார்.

இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவஹர் உத்தரவிட்டிருந்தார். போலீசார் நடத்திய விசாரணையில், பூமாலை தொடர் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு வந்தது உறுதியானது. அதைத்தொடர்ந்து இன்று பணியில் இருந்த பூமாலையை நிரந்தர பணிநீக்கம் செய்ய காவல்துறை தலைவர் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவஹர், பூமாலையை நிரந்தர பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

பணி நீக்க உத்தரவு காவலர் பூமாலையிடம் வழங்கப்பட்டதை தொடர்ந்து அவர் காவல்நிலையத்தை விட்டு வெளியேறினார்.

லஞ்சம் வாங்கியது, மனைவி குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்டது என அடுத்தடுத்து அடுக்கடுக்கான புகாருக்கு உள்ளான காவலர் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment

மற்ற பதிவுகள்