கோபி அருகே உள்ள கூகலூர் காட்டுவலுவில் சரக்கு ஆட்டோவின் பின்புறம் பைக் மோதியதில் படுகாயமடைந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கோபி அருகே உள்ள கூகலூரை சேர்ந்தவல் தங்கராஜ் மகன் அருண்குமார்(24). கட்டிட தொழிலாளி. அருண்குமார் புதுக்கரைபுதூரில் இருந்து வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
கூகலூர் அருகே உள்ள காட்டுவலுவு என்ற இடத்தில் சென்ற போது, முன்னாள் சென்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோவின் ஓட்டுநர் திடீரென ஆட்டோவை நிறுத்தவே, பின்னால் சென்று கொண்டிருந்த பைக் நிலை தடுமாறி சரக்கு ஆட்டோ மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த அருண்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து, சரக்கு ஆட்டோ ஓட்டுநர் கூகலூரை சேர்ந்த வெங்கிட்டானிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி அருகே உள்ள கூகலூர் காட்டுவலுவில் சரக்கு ஆட்டோவின் பின்புறம் பைக் மோதியதில் படுகாயமடைந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தங்க விலை 🟡 – ₹58000/ சவரன்
வெள்ளி விலை⚪ – ₹9100/100g
Source
Thangamayil Jewellers
Katcheri medu, Gobichettipalayam