கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டு வாய்பேசமுடியாத 9 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள கோவில் அருகே விளையாடிக் கொண்டு இருந்துள்ளார், அப்போது அங்கு மது போதையில் வந்த நபர் ஒருவர் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார்,

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை பிடித்து காவல் நிலையத்திற்க்கு தகவல் அளித்துள்ளனர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மது போதையில் இருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் கீழ்வானி பகுதியை சேர்ந்த முனியன் (45) என்பதும் அவர் சிறுமியிடம் தவறாக முயற்சி செய்தது தெரியவந்தது,தொடர்ந்து சிறுமியின் தாய் கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் முனியன் என்பவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்,அதனைத் தொடர்ந்து முனியனை ஈரோடு மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.