கோபிசெட்டிபாளையம் அருகே மர்ம விலங்கு கடித்ததில் 9 ஆடுகள் பலி. சம்பவ இடத்தில் டி.என்.பாளையம் வனத்துறையினர் மற்றும் சிறுவலூர் காவல்துறையினர் விசாரணை


கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள அயலூர் எல்லப்பாளையம் பகுதியில் பெரும்பாலானோர் விவசாயம் செய்வதன் கால்நடைகளையும் வளர்த்து வருகின்றனர்.


இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல விவசாயிகள் தங்கள் ஆடுகளை பட்டியில் கட்டி விட்டு வீடு திரும்பிய நிலையில் இன்று காலை மேய்ச்சலுக்காக கொண்டு செல்ல பட்டிக்கு வந்து பார்க்கும்போது கருப்பசாமி என்பவருக்கு சொந்தமான இடத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த 7 ஆடுகள் மர்ம விலங்கு தாக்கி இறந்தது உள்ளது,
மேலும் அதே பகுதியில் வசிக்கும் விஜயகுமார் என்பவர் வளர்த்து வந்த 1 ஆடும் , பாப்பாத்தி என்பவர் வளர்த்து வந்த 1 ஆடும் மர்ாமான முறையில் இறந்து கிடந்துள்ளது,இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் சிறுவலூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் டி.என் பாளையம் வனத்துறையினர் மற்றும் கொளப்பலூர் கால்நடை மருத்துவர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் சம்பவ இடத்தில் விசாரனை மேற்கொண்டுள்ளனர்.
மர்ம விலங்கு தாக்கி எல்லப்பாளையம் பகுதியில் 9 ஆடுகள் ஒரே சமயத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தொடர்ந்து ஆடுகளைக் கடித்துக் கொன்ற மர்ம விலங்கு என்ன என்பது குறித்து சம்பவ இடத்தில் டி.என்.பாளையம் வனத்துறையினர் மற்றும் சிறுவலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.