திமுகவினர் ஒவ்வொரு தேர்தலிலும் பணத்தை கொடுத்தால் வெற்றி பெற்று விடுவோம் என்று நினைக்கிறார்கள், 2026 சட்டமன்ற தேர்தல் திமுகவை வீட்டுக்கு அனுப்புகின்ற தேர்தலாக அமையும் என கோபிசெட்டிபாளையத்தில் மின்கட்டன உயர்வை திரும்ப பெறக்கோரி நடைபெற்ற ஆர்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு


கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் சாலையில் தனியார் திரையரங்கு அருகே, தமிழகத்தில் மூன்றாவது முறையாக மின் கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரியும்,நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் பருப்பு பாமாயில் போன்ற அத்தியாவசிய பொருட்களை நிறுத்த முயற்சிக்கும் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமாகிய செங்கோட்டையன் ,சத்தியமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு மின் கட்டண உயர்வை கண்டித்து முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரை ஆற்றிய முன்னாள் அமைச்சர் கே. ஏ.செங்கோட்டையன் ,
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம், மடிக்கணினி, ஆடு மாடு வழங்குதல் உள்ளிட்ட பல நல்ல திட்டங்களை இந்த அரசு முடக்கி வைத்துள்ளது,
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பருவமழை தொடங்கிய பின்னரே காவிரி நதிநீர் பங்கீடு குறித்து பேச்சு வார்த்தையை தமிழக அரசு துவங்குகின்றது, சட்டமன்றத்தில் முன்கூட்டியே தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை எனவும்,
கர்நாடகாவில் திமுகவின் கூட்டணி கட்சியின் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது, ஆனால் தமிழக முதலமைச்சர் காவிரி நீர் கேட்டு பேச்சுவார்த்தைக்கு செல்ல முடியவில்லை


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கூட காவிரி நீரை பெறுவதற்கான பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டார்.
திமுகவினர் ஒவ்வொரு தேர்தலிலும் பணத்தை கொடுத்தால் வெற்றி பெற்று விடுவோம் என்று நினைக்கிறார்கள், 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீட்டுக்கு அனுப்புகிற தேர்தலாக அமையும்,
கள்ளச்சாராயம் கொலை கொள்ளை அதிகரித்து சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது, இதை தடுக்கின்ற சக்தி திமுகவுக்கு இல்லை என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்
ஆனால் அதிமுக ஆட்சி மக்களுக்கு பணியாற்றக்கூடிய ஆட்சியாக உள்ளது, அதிமுக நூறாண்டு காலம் ஆட்சியில் இருக்கும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்
தேங்காய் எண்ணெயை நியாய விலை கடைகளில் விற்பனை செய்வதற்கு திமுக அரசு தயக்கம் என்ன காரணம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
தேங்காய் எண்ணெய்கள் நியாய விலை கடைகளில் விற்பனை செய்யும் போது தமிழகத்தில் தேங்காய் விலை மற்றும் உற்பத்தி உயரும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைவார்கள்,
தமிழகத்தில் அதிகமாக தேங்காய் உற்பத்தி உள்ள நிலையில் இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்துள்ளதா என்றால் அது இல்லை,
அத்திக்கடவு அவிநாசி திட்டம் அதிமுக ஆட்சியில் 95 சதவிகிதம் பணிகள் முடிவு பெற்ற நிலையில் மீதமுள்ள 5 சதவிகித பணிகளை மூன்றாண்டு காலம் செய்யாமல் இந்த அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது, தூங்கிக் கொண்டு இருக்கின்ற அரசை தட்டி எழுப்புவோம்,
தமிழகத்தில் மக்களாட்சி நடைபெறவில்லை மகேசன் ஆட்சி நடைபெற்றுக் கொண்டுள்ளது, அதிமுகவை தமிழகத்தில் எந்த சக்தியாலும் அசைத்து விட முடியாது என்ற வரலாற்றை படைப்போம்
ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் ஒரு திட்டத்தை மக்கள் எதிர்த்தால் உடனடியாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுப்பார் ஆனால் இந்த ஆட்சியில் ஆர்ப்பாட்டம் நடத்துவது பற்றி எந்த கவலையும் இல்லாமல் செவிடன் காதில் ஊதிய சங்காக இருக்கிறார்கள் என்றார்.