கோபிசெட்டிபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் முதலாம் ஆண்டு விழா மற்றும் 42 வது மாநில மாநாடு வணிகர் அதிகார பிரகடன மாநாடு விளக்க கூட்டம்

InShot 20250310 210912475 scaled
InShot 20250310 211051091 scaled

தமிழகம் முழுவதும் மாநாடு நடைபெறும் மே 5 அன்று 27 லட்சம் கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டு வணிகர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர் – கோபிசெட்டிபாளையத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரம் ராஜா பேட்டி
கோபிசெட்டிபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் முதலாம் ஆண்டு விழா மற்றும் 42 வது மாநில மாநாடு வணிகர் அதிகார பிரகடன மாநாடு விளக்க கூட்டம் நடைபெறுகிறது, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா மற்றும்; சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த விளக்க கூட்டத்தில்
முன்னாள் அமைச்சர் கே செங்கோட்டையன் பேசுகையில்
வணிகர் சங்க மாநிலத் தலைவர் விக்ரம் ராஜா கடுமையாக உழைக்கக் கூடியவர், அவர் எப்போது தூங்கப் போகிறார் என்பதை நான் பல நேரம் கூர்ந்து கவனித்துள்ளேன்,
ஆன்லைன் வர்த்தகத்தால் சிறு வியாபாரிகள் அழிந்து விடக்கூடாது என்ற விக்ரம் ராஜா கோரிக்கை வைத்தார், அதற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நான் இருக்கும் வரை ஆன்லைன் வர்த்தகம் தடை செய்யப்படும் என்று அதற்கான நடவடிக்கைகளை எடுப்போம் என்றார்.
வியாபாரிகளை பேணி காக்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடத்தில் இருப்பதால்தான் அனைவரையும் அழைக்கின்றார், வெற்றி பெறுகிறார், அதற்காக விக்ரமா ராஜாவிற்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னையே உளுக்க போகின்ற அளவிற்கு இந்த மாநாடு அமையும் என்ற வரலாறு படைக்கப் போகின்றது என்றார்.
அதனைத் தொடர்ந்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில செயலாளர் விக்ரமராஜா செய்தியாளர்கள் சந்திப்பின்போது
மே 5 ஆம் தேதி 42வது மாநில மாநாடு ஏழு லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்
ஈரோடு மாவட்டத்தில் 11 ஆயிரம் பேர் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்
தமிழகத்தினுடைய ஒட்டுமொத்த வணிகர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்
ஆன்லைன் வர்த்தகம் ஜிஎஸ்டி, கார்ப்பரேட் கம்பெனி நெருக்கடி, உணவு பாதுகாப்புச் சட்டம், விலைவாசி உயர்வினை திரும்ப பெற வலியுறுத்தி தமிழக முதல்வர் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்
சாமானிய மக்களின் கோரிக்கைகளை ஏற்கக்கூடிய மாநாடாக, மத்திய மாநில அரசுகள் பங்கேற்கும் சாமானிய வணிகர்களை பாதுகாப்பதற்கு புதிதாக சட்டம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என்ற உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன
தமிழகம் முழுவதும் மாநாடு நடைபெறும் மே 5 அன்று 27 லட்சம் கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டு வணிகர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர் என அவர் தெரிவித்தார்

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment

மற்ற பதிவுகள்