கோபி அடுத்த டிஎன்பிளையும் அருகே காளியூர் செல்லிபாளையம் ஒத்த குதிரை தோட்டம் பகுதியில், கிராம நிர்வாக அலுவலர் சுந்தரி மற்றும் உதவியாளருடன் லோழ்ந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் 50, என்பவரது விவசாய பூமியில் பிஜி புதூர் நால்ரோடு பகுதியைச் சேர்ந்த பூபதி 30 என்பவர் டிராக்டர் கம்பரசர் மூலமாக துளையிட்டுக் கொண்டு இருந்து உள்ளார்.இது குறித்து வருவாய்த்துறையினர் விசாரித்த போது டிராக்டர் கம்பரசர் மூலமாக துளையிட்டு வெடிவைத்து ஆழப்படுத்தி நீர் சேர்க்கை தொட்டி அமைக்க இருப்பதாக தெரியவந்தது.
மேலும் டிராக்டர் கம்பரசர் வாகனம் மூலம் நான்கு அடி ஆழம் துளையிட்டு இருந்ததும், ஊத்துக்குளி செல்வநாயகி அம்மன் என்ற பெயரில் எக்ஸ்ப்போ ஷிவ் குடோன் வைத்திருக்கும் திருநாவுக்கரசு என்பவர் மூலம் 100 எண்ணிக்கை கொண்டு ஜெலட்டின் மச்சி பயன்படுத்த வைத்திருந்தது தெரியவந்தது.பொதுமக்கள் நடமாட்டம் உள்ள ஓட்டக்குட்டை சாலை அருகில் அனுமதியின்றி பாறைகளை துளையிட்டு வெடிக்க கூடிய ஜெலட்டின் குச்சிகளை மேய்க்கின்றதாக கிராம நிர்வாக அலுவலரின் புகார்படி பங்களாபுதூர் போலீசார் ஜெலட்டின் உச்சிகளை பறிமுதல் செய்து சிவசுப்பிரமணியம், பூபதி ஆகியோரை கைது செய்தனர்
கோபியில் ஜெலட்டின் குச்சிகளை வைத்திருந்தவர் கைது

தங்க விலை 🟡 – ₹58000/ சவரன்
வெள்ளி விலை⚪ – ₹9100/100g
Source
Thangamayil Jewellers
Katcheri medu, Gobichettipalayam