கோபிசெட்டிபாளையம் சி கே கே மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பொது தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்து இனிப்பு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்

நடந்த முடிந்த 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் கோபிசெட்டிபாளையம் பகுதியில் உள்ள சி.கே.கே. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர்.கோபிகா 500 க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சாதனை படைத்துள்ளார்.

தமிழில் 99 மதிப்பெண்களும் ஆங்கிலம் கணிதம் அறிவியல் சமூக அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் 100 மதிப்பெண்கள் என மொத்தம் 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்தார்


மாணவி கோபிகா இன்று கோபியில் உள்ள தான் பயின்ற பள்ளிக்கு வந்திருந்த போது ஆசிரியர்கள் பள்ளி நிர்வாகத்தினர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர், தொடர்ந்து மாணவிக்கு பரிசு மற்றும் இனிப்புகளை பள்ளி ஆசிரியர்கள் வழங்கி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்


பின்னர் அந்த மாணவி ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ட் அண்ட் மெஷின் லேனெங்கில் இன்ஜினியர் ஆவது எனது குறிக்கோள் என தெரிவித்துள்ளார்.