நம்பியூர் வட்டார அனைத்து வணிகர் சங்கம் மற்றும் உணவு பாதுகாப்பு துறை சார்பில் உரிமம் பெற சிறப்பு முகாம் நம்பியூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர்.தங்கவிக்னேஷ் அறிவுறுத்தலின் பெயரில் நடைபெற்ற சிறப்பு முகாமில் நம்பியூர் பகுதியைச் சேர்ந்த மளிகை கடைகள், ஓட்டல்கள், உணவு உற்பத்தியாளர்கள்,மற்றும், பேக்கரிகள் உரிமையாளர்கள் கலந்து கொண்டு உரிமம் பெற விண்ணப்பம் கொடுத்தனர். மேலும் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை உள்ள சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.முகாமில் 6 மாதம் முன்பு காலாவதியான உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் ஆகியவை புதுப்பித்து தரப்பட்டது.இதில் பதிவு சான்றிதழ் 1 வருடத்திற்கு கட்டணம் ரூ 100 ம், உரிமைக் கட்டணம் ரூ.2000 மும்உணவு தயாரிப்பாளர்களுக்குவருடத்திற்கு ரூ.3000 கட்டணமாக பெறப்பட்டது.முகாமில் நம்பியூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கேசவராஜ், ஸ்ரீதேவிப்ரியா, ரம்யா ஆகியோர் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டும், உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை விளக்கி கூறினர்.முகாமில் நம்பியூர் வட்டார பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகர்கள் கலந்து கொண்டு உரிமம் புதுப்பிக்க மற்றும் பதிவு சான்றிதழ் பெற விண்ணப்பம் கொடுத்தனர்.முகாமிற்கான ஏற்பாடுகளை நம்பியூர் வட்டார அனைத்து வணிகர்கள் சங்க நிர்வாகிகள் செயலாளர் மனோகரன், சேரன் சரவணன், கந்தசாமி மோகன்குமார் செய்திருந்தனர்.