கோபிசெட்டிபாளையம் அருகே கீழ்பவானி வாய்க்காலில் நீரில் மூழ்கி மாயமான மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபரை நம்பியூர் தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.

The Nambur Fire Department is searching for the illusory mentally ill Walliber, who is submerged in the lowerpani tilt near gobi

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள குருமந்தூர் பூசாரியூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம்(25) இவர் கடந்த ஒரு வருட காலமாக மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

1724756760058614 0
1724756753344520 1

இந்த நிலையில் இன்று ஜீவானந்தம் மீனவர் காலனி வாய்க்கால் பாலம் பகுதியில் கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி உள்ளார், அப்போது எதிர்பாராத விதமாக ஜீவானந்தம் வாய்க்கால் நீரில் மூழ்கியுள்ளார்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர், ஆனால் ஜீவானந்தத்திற்கு நீச்சல் தெரியாத காரணத்தினால் நீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளார்,

இது குறித்து அருகில் இருந்தவர்கள் நம்பியூர் தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நம்பியூர் தீயணைப்புத் துறையினர் நீரில் மூழ்கி மாயமான மனநலம் பாதிக்கப்பட்ட ஜீவானந்தத்தை தேடி வருகின்றனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment

மற்ற பதிவுகள்