கோபிசெட்டிபாளையம் அருகே ஏலச்சீட்டு மற்றும் கடனாக வாங்கிய தொகை ரூ.1 கோடியே 60 லட்சம் மோசடி செய்த ஆசிரியர்கள் இருவரை கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் கைது செய்தனர்.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நாகர்பாளையம், நஞ்சப்பா நகரைச் சேர்ந்தவர் பிரபா(46) இவர் வண்ணாந்துறை புதூர், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். மற்றும் குடியரசி(47) இவர் கோபி அருகே உள்ள அவ்வையார் பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றனர். மேலும், குளோரி(60) ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார்.
இவர்கள் 3 பேரும் சேர்ந்து ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளனர், கரட்டூர் கே.எஸ்.டி நகரை சேர்ந்த விவசாயி பழனிச்சாமி உட்பட பலர் ஏலச்சீட்டில் சேர்ந்து பணம் செலுத்தி வந்துள்ளனர், இந்நிலையில், ஏலச்சீட்டு பணம் மற்றும் கடனாக வாங்கிய தொகை ரூ.1 கோடியே 60 லட்சத்தை பழனிச்சாமி உட்பட பலருக்கு திருப்பி தராமல் 3 பேரும் ஏமாற்றி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பழனிச்சாமி கொடுத்த புகாரின் பேரில், கோபி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர்கள் பிரபா, குடியரசி ஆகியோரைக் கைது செய்தனர். பின்னர், கோபியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள ஓய்வு பெற்ற ஆசிரியர் குளோரியை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
கோபிசெட்டிபாளையம் அருகே ஏலச்சீட்டு மற்றும் கடனாக வாங்கிய தொகை ரூ.1 கோடியே 60 லட்சம் மோசடி செய்த ஆசிரியர்கள் இருவரை கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் கைது செய்தனர்.

தங்க விலை 🟡 – ₹58000/ சவரன்
வெள்ளி விலை⚪ – ₹9100/100g
Source
Thangamayil Jewellers
Katcheri medu, Gobichettipalayam