நம்பியூர் ஒன்றியத்தில் 2 கோடியே 63 லட்சம் மதிப்பீட்டில் புதிய பணிகள் மற்றும் நடந்து முடிந்த பணிகள் துவக்க விழாகோபி சட்டமன்ற உறுப்பினர் கே. ஏ . செங்கோட்டையன் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.


நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் 2 கோடி 63 லட்சம் மதிப்பீடு நடைபெற்ற மற்றும் நடந்து முடிந்த பணிகளுக்கான துவக்க விழா நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு நம்பியூர் ஒன்றிய குழு தலைவர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
நம்பியூர் ஒன்றிய அதிமுக செயலாளர் தம்பி சுப்பிரமணியம், ஈஸ்வரமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் ரங்கசாமி, ஊராட்சி மன்ற தலைவர் திருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக கோபி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ . செங்கோட்டையன் கலந்து கொண்டு புதிய பணிகளுக்கான பூமி பூஜையும், நடந்து முடிந்த புதிய பள்ளி கட்டிடம், மேல்நிலைத் தொட்டி உள்ளிட்ட 2 கோடி 63 லட்சத்தில் நடந்து முடிந்த பல்வேறு பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நம்பியூர், எலத்தூர் பேரூராட்சி அதிமுக செயலாளர்கள் கருப்பணன், சேரன் சரவணன்,ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டமூர்த்தி,அதிமுக கட்சி நிர்வாகிகள் மனோகரன்,திவாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.