கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க கோரியும், ஈரோடு மாவட்ட மலையாளி இன மக்களை பழங்குடி பட்டியலில் சேர்த்திட வலியுறுத்தியும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் மாநில தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


இந்த ஆர்ப்பாட்டத்தில், அனைத்து பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க கோரியும், 2006 வன உரிமை சட்டத்தின் படி அனுபவ நிலங்களுக்கு மனு செய்த அனைவருக்கும் பட்டா வழங்க வலியுறுத்தியும், வீட்டுமனை பட்டா இல்லாதவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரியும்,
ஈரோடு மாவட்ட மலையாளி இன மக்களை பழங்குடி பட்டியலில் சேர்க்க கோரியம், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவதை தடுக்க வேண்டும் எனவும், காட்டுப்பன்றியை கொள்வதற்கு அனுமதி வழங்க கோரியும், கடம்பூரில் உண்டு உறைவிட பள்ளி அமைக்க வலியுறுத்தியும்,
பர்கூர் மலைப்பகுதியை மூன்று பகுதிகளாக பிரித்து ஒன்றியமாக வலியுறுத்தியும், தாமரை கரையிலிருந்து மடம் வரை செல்லும் சாலையை உடனடியாக சரி செய்து தர வேண்டும், உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சத்தியமங்கலம், கடம்பூர், குன்றி, தாமரைகரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.