கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள எரம்பாளையம் பகுதியில் ரூ 14 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தினை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் காசிபாளையம் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக பேனாக்கள் மற்றும் டேபிள், பெஞ்ச் வழங்கினார்

Former Minister K A Chengotan Casibai, who opened the newly built Anganwadi Center in the R14 lakh rating in the Eramboyum area near gobichettipalayam, provided the bench for free pens and table for students at secondary school

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள எரம்பாளையம் பகுதியில் ரூ 14 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தினை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் காசிபாளையம் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக பேனாக்கள் மற்றும் டேபிள், பெஞ்ச் வழங்கினார்.

1721086427006617 0
1721086419205267 1

தொடர்ந்து காமராசர் பிறந்தநாளான இன்று அவரது படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார் பின்னர் அங்குள்ள குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார்

1721086411506454 2
1721086405148338 3

அதனைத் தொடர்ந்து காசிபாளையம் மேல்நிலைப்பள்ளியில் இலவச டேபிள் பெஞ்ச் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக பேனாகளை வழங்கியவர் பள்ளிக்கு இலவச டேபிள் பெஞ்சுகளை வழங்கினார்.

1721086399426490 4
1721086393097384 5

அதற்குப் பின்னர் சிறப்புரையின்போது பேசிய முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன்,

வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் லேப்டாப் மற்றும் ஹைடெக் லேப் எவ்வளவு முக்கியம் என்பது மாணவ மாணவிகள் ஆகிய உங்களுக்கு தெரியும்,அதிமுக ஆட்சியில், அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பில் 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது,

மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை பிரகாசம் உள்ள எதிர்காலமாக மாற்றுவதற்கு சிறந்த கல்வியை பெறுவது மட்டுமல்ல ஒழுக்கத்துடன் சேர்ந்த கல்வியையும் பெற்று சிறந்த மாணவர்களாக திகழ்வதற்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார்.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment