நம்பியூர் அருகே மர்ம விலங்கு தாக்கி 7 ஆடுகள் பலி.
நம்பியூர் அடுத்துள்ள கோட்டுபுள்ளாம் பாளையம் பூங்கரை புதூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் அப்பகுதியில் விவசாயம் செய்வதன் கால்நடைகளை வைத்து வளர்த்து வருகிறார்.


இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல தனது ஆடுகளை ஆட்டு கொட்டகையில் கட்டி வைத்து வீடு திரும்பியுள்ளார்இன்று காலை வழக்கம் போல ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வந்து பார்த்தபோது ஏழு ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.


இதுகுறித்து நம்பியூர் காவல் துறையினருக்கு சக்திவேல் தகவல் தெரிவிக்கவும் பேரில் சம்பவ இடத்தில் நம்பியூர் காவல் துறையினர் ஆடுகளை கொன்ற மர்ம விலங்கு குறித்து விசாரணை மேற்கொண்டனர். டி.என்.பாளையம் வனத்துறை அதிகாரிகளும் நேரில் வந்து விசாரித்து கால் தடங்களை ஆய்வு செய்தனர்.