பிரபல கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

The famous cannabis dealer was arrested and jailed under the Gண்டர்nter Act.

பிரபல கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோபிசெட்டிபாளையம் மது விலக்கு போலீசார் கடந்த மே மாதம் 11 ம் தேதி பவானி புது பாலம் பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எடப்பாடி சாலை, காந்தியடிகள் வீதியை சேர்ந்த மதிவாணன்(40) என்பவரிடம் சோதனை செய்தனர்.

போலீசார் நடத்திய சோதனையில் அவரது பைக்கில் 12 கிலோ கஞ்சா இருப்பதும், அதை மதிவாணன் விற்பனைக்காக கொண்டு செல்வதும் தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து மதிவாணனை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில் கஞ்சா வியாபாரியான மதிவாணனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட எஸ்.பி. ஜவஹர் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்காரா கஞ்சா வியாபாரி மதிவாணனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து சிறையில் இருந்த மதிவாணன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைத்தனர்

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment

மற்ற பதிவுகள்