டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி அருகேயுள்ள பெருமுகை ஊராட்சி தொட்டகோம்பை மலைவாழ் கிராமம் கரும்பாறை பகுதியில் உள்ள மாதேஸ்வரன் கோவில் அருகிலுள்ள தோப்பு மடுவு பள்ளத்தில் ஒரு ஆண் சடலம் ஒன்று மிதந்து கொண்டிருப்பதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரணையில்; நீரில் மூழ்கி இறந்து போன நபர், தொட்டக்கோம்பை மலைவாழ் கிராமத்தை சேர்ந்த கடுகுராமன் என்பவரது மகன் ரமேஷ் (35), திருமணம் ஆகாதவர், கூலி வேலை செய்து வந்துள்ளார்.
சம்பவ நாளான நேற்று முன்தினம் மதியம், இறந்து போன ரமேஷ்,, தொட்டகோம்பை அருகேயுள்ள கரும்பாறை கிராமத்தில் உள்ள மாதேஸ்வரன் கோவிலுக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு நண்பர் ஒருவருடைய மோட்டார் சைக்கிளை எடுத்துக் வந்துள்ளார்.
மாதேஸ்வரன் கோவில் அருகிலுள்ள தோப்பு மடுவு பள்ளத்தில் குளிக்க செல்லும் முன்பு அவரது ஆடைகள் அருகிலுள்ள மரத்தின் மீது மாட்டி இருந்துள்ளது.
அதோடு அங்கு ரமேஷ் மது அருந்தியதறகான அடையாளங்களும் இருந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மது அருந்திய ரமேஷ் பள்ளத்தில் குளித்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
கோபிசெட்டிபாளையம் அருகே டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி அருகேயுள்ள பெருமுகை ஊராட்சி தொட்டகோம்பை மலைவாழ் கிராமம் ரமேஷ் பள்ளத்தில் குளித்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி இறந்து இருக்கலாம்

தங்க விலை 🟡 – ₹58000/ சவரன்
வெள்ளி விலை⚪ – ₹9100/100g
Source
Thangamayil Jewellers
Katcheri medu, Gobichettipalayam