கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மற்றும் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.

கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டநிலையில் கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளான பேருந்து நிலையம்,மொடச்சூர்,நல்லகவுண்டன்பாளையம், கரட்டடி பாளையம், குள்ளம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது,

அதேபோல நம்பியூர் சுற்றுவட்டார பகுதிகளான நம்பியூர் பேருந்து நிலையம், குருமந்தூர்,மூனாம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி,மற்றும் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது, கனமழை காரணமாக கோபி நகரம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது,


கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த மழையால் வெப்பம் தணிந்தது, சாலை ஓரங்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.