
நம்பியூர் அருகே உள்ள மூணாம் பள்ளி என்ற இடத்தில் டீக்கடையில் டீ போட்டு நூதன முறையில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரித்தார்.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் அருணாச்சலம் போட்டியிடுகிறார் அவர் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணிக்கு நம்பியூர் அருகே மூனாம்பள்ளி என்று இடத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்அப்போது அங்குள்ள டீக்கடை ஒன்றிற்கு சென்ற வேட்பாளர் அருணாச்சலம் டீக்கடை உரிமையாளரிடம் வாக்கு சேகரித்தார்அதைத் தொடர்ந்து அவரே டீயை ஆற்றி அங்கு காத்திருந்த பொது மக்களுக்கு கொடுத்து நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.வாக்கு சேகரிப்பின் போது நம்பியூர் பகுதி அதிமுகவினர் கலந்து கொண்டனர்.