நம்பியூர் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி சீருடை
நம்பியூர் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் தீபாவளிக்கு வழங்கப்படும் சீருடைகள் பேரூராட்சி அலுவலகத்தில் வழங்கப்பட்டது

பெண் தூய்மை பணியாளர்களுக்கு பாலிஸ்டர் புடவை இரண்டு எண்ணிக்கையும் ஆண் தூய்மை பணியாளர்களுக்கு பாலிஸ்டர் காக்கி சீருடைகள் இரண்டு செட்டும் பேரூராட்சி தலைவர் மெடிக்கல் ப.செந்தில் குமார், பேரூராட்சி துணைத் தலைவர் தீபா தமிழ்ச்செல்வன்அவர்களும் பேரூராட்சி செயல் அலுவலர் இரா.நடராஜன் அவர்களும் வழங்கினார்கள் இந்நிகழ்வில் பேரூராட்சி அலுவலக இடைநிலை உதவியாளர் திருமதி.சித்ரா துப்புரவு அலுவலர் மேகலா மற்றும் கவுன்சிலர்கள் செந்தில்குமார்,நந்தகுமார்,ஆறாவது வார்டு செயலாளர் வரதராஜ், எட்டாவது வார்டு செயலாளர் ஆனந்தகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.