கோபிசெட்டிபாளையம் அருகே ஆயிபாளையம் பகுதியில் இயங்கி வரும் தேங்காய் நார் மில்லில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான நார்கள் தயாரிக்கும் இயந்திரங்கள,தேங்காய் நார்கள், தீயில் கருகி சேதமானது.


கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள சிறுவலூர் ஆயிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராகுல், இவர் அதே பகுதியில் தேங்காய் நார் மில் ஒன்றை நடத்தி வருகிறார்.


இவர் சிறுவலூர் மற்றும் ஆயிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் தேங்காய் மட்டைகளை விலைக்கு வாங்கி அதிலிருந்து நார்கள் உற்பத்தி செய்து அதன் மூலம் கயிறு தயாரித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனை செய்து வருகிறார்.


கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகமாக இருந்த நிலையில் நார்களில் பற்றிய மலமல என அனைத்து இடங்களிலும் பற்றி எரிந்தது.


தீயை அணைக்க முடியாத நிலையில் உடனே மில் ஊழியர்கள் பெருந்துறை மற்றும் கோபி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர், தகவல் இருந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர்கள் நார்களின் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நார்கள் தயாரிக்கும் இயந்திரங்கள் மற்றும் தேங்காய் நார்கள் முற்றிலும் தீயில் கருகி சேதமானது
இதனைக் கண்ட மில் உரிமையாளர் குடும்பத்தார் கதறி அழும் காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது. இந்த தீ விபத்தின் காரணம் குறித்து சிறுவலூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.