40 ஆண்டு காலமாக மக்களுகுக்கு முழுமையாக பாதுகாப்பளிக்கின்ற தொகுதியாககோபிசெட்டிபாளையம் தொகுதி அமைந்துள்ளது. கோபிசெட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு.


கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கோட்டுபுள்ளம்பாளையம் பகுதியில் 15 வது நிதி குழு மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நிதி, அண்ணா மறுமலர்ச்சி நிதியிலிருந்து ரூ.60 லட்சம் மதிப்பீட்டில், ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம்,புதிய தார் சாலை மற்றும் உரும்பபாளையம் பகுதியில் நூலக கட்டடம் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளை முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.


வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கிவைக்க சென்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு அப்பகுதி பொதுமக்கள் வழி நெடுவிலும் மலர்தூவி உற்சாகமாக வரவேற்றனர்.அதனைத் தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன்.கோட்டுப்புள்ளம்பாளையம் ஊராட்சியில் இனி எந்த பணிகளும் இல்லை என்ற அளவில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்றுள்ளது. தன்னிறைவு பெற்ற ஊராட்சி மன்றமாக கோட்டுப்புள்ளம்பாளையம் ஊராட்சி திகழ்ந்து கொண்டுள்ளது.இந்த ஊராட்சியில் 7 இடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளது, இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. தடுப்பணைக்கு கீழ் அமைந்திருந்த நிலையில் இரண்டு அடி உயரம் மண் கொட்டி தார்சலை அமைக்கப்பட்டுள்ளது.
கோபி தொகுதியை பொறுத்தவரை பிரச்சனை இல்லாத ஒரு தொகுதி. கோபி சட்டமன்றத் தொகுதியில் 40 ஆண்டு காலமாக மக்களுக்கு முழுமையாக பாதுகாப்பளிக்கின்ற தொகுதியாக கோபிசெட்டிபாளையம் தொகுதி அமைந்துள்ளது.
இதில் யூனியன் சேர்மன் மௌதீஸ்வரன், மாவட்ட கவுன்சிலர் அனுராதா, கோபி நகர செயலாளர் கணேஷ், கோபி ஒன்றிய செயலாளர் குறிஞ்சிநாதன், மாவட்ட எம்ஜிஆர் அணி அருள் ராமச்சந்திரன், மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை தலைவர் சிபிஜெட் கார்த்திக், அருகில் அளுக்குளி தலைவர் இந்துமதி பாண்டுரங்கன், கோட்டுபுள்ளபாளையம்ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.