கோபிசெட்டிபாளையம் அருகே சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய2 பெண்கள் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கோபிசெட்டிபாளையம், கூகலூரை சேர்ந்தவர் மூர்த்தி (32). கோபிசெட்டிபாளையம் ஓடத்துறையை சேர்ந்தவர் மங்களநாயகி (35). அதே பகுதியைச் சேர்ந்தவர் சசிகலா (35). இவர்கள் மூவரும் சேர்ந்து சிறுமி ஒருவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் துறையினர் மூவரையும் கைது செய்தனர். கோவை மத்திய சிறையில் 3 பேரும் அடைக்கப்பட்ட நிலையில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனை அடுத்து மூவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான நகல் அவர்களிடம் வழங்கப்பட்டது.
கோபிசெட்டிபாளையம் அருகே சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய2 பெண்கள் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தங்க விலை 🟡 – ₹58000/ சவரன்
வெள்ளி விலை⚪ – ₹9100/100g
Source
Thangamayil Jewellers
Katcheri medu, Gobichettipalayam