கோபிசெட்டிபாளையம் அருகே பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் பிரசவத்திற்கு பிறகு உயிரிழப்பு. தாயின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் வேட்டைகாரன் கோவில் பகுதியில் கோபி – திருப்பூர் சாலையில் மறியல் போராட்டம்.


கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள சுண்டபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவருக்கு மைதிலி(28) என்ற மனைவியும் பிரதிக்ஷா என்ற 6 வயது மகளும் உள்ளார்மைதிலி இரண்டாவது முறையாக கருவுற்றிருந்த நிலையில் கடந்த 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கோபி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மைதிலிக்கு நடைபெற்ற பிரசவத்தில் குழந்தை பிறந்துள்ளதுஅதை தொடர்ந்து பிரசவத்திற்கு பின்னர் மைதிலிக்கு ரத்தப்போக்கு அதிகம் இருப்பதாக கோபி அரசு மருத்துவமனையிலிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு மைதிலியை கொண்டு சென்றுள்ளனர்.
கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மைதிலி இன்று உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.மைதிலி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், இறப்பிற்க்கு காரணமாவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டியும் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் வேட்டைக்காரன் பகுதியில் கோபி- திருப்பூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் பெண் உயிரிழப்பு குறித்து உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததின் உறவினர்கள் மறியல் போரட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர், சாலை மறியல் போராட்டம் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கோபி – திருப்பூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் இறந்த மைதிலியின் குழந்தை கோபி அரசு மருத்துவமனையில் உள்ளதாகவும் குழந்தையின் முகத்தை பார்க்காமலே தாயை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும். மருத்துவமனை ஊழியர்கள் உறவினர்கள் யாரையும் மைதிலியை சந்தித்த விடவில்லை என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.