கோபி அருகே உள்ள வடுகபாளையம் புதூரில் இளநீர் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 3 சவரன. நகை மற்றும் பணம் கொள்ளையடித்தவர் கைது செய்யப்பட்டார்.

Robbery of Gobi's house

கோபி அருகே உள்ள வடுகபாளையம் புதூரை சேர்ந்தவர் ஆனந்தன்(60). இவர் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த ஜூலை 22ம் தேதி ஆனந்தன், வீட்டை பூட்டி விட்டு இளநீர் வியாபாரத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அதைத்தொடர்ந்து வீட்டிற்குள் சென்று பார்த்த போது, டேபிள் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டு இருந்த 3 சவரன் நகை மற்றும் 2 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து ஆனந்தன் அளித்த புகாரின் அடிப்படையில் கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையனை தேடி வந்தனர்.

இந்நிலையில் கோபி போலீசார் கோபி பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டு இருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய விசாரணையில் ஆனந்தன் வீட்டில் கொள்ளையடித்தவர் அவர் தான் என்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் கைது செய்யப்பட்டவர் வடுகபாளையம் புதூரை சேர்ந்த சுப்பிரமணியன் என்கிற குமார்(55) என்பதும், இவர் ஓலப்பாளையம் பிரிவில் பைக் மெக்கானிக் ஒர்க்‌ஷாப் வைத்து நடத்தி வந்துள்ளார்.

அப்போது ஆனந்தன் பழக்கமாகவே, அவரிடம் நகை இருப்பதை அறிந்து ஆனந்தன் வியாபாரத்திற்காக சென்ற நேரத்தில் கொள்ளையடித்து இருப்பது தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து கோவை சின்னியம்பாளையத்தில் தங்கி இருந்த குமார், நேற்று கோபி வந்த போது தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட குமார் கோபியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment

மற்ற பதிவுகள்