நம்பியூர் குமுதா பள்ளி மாணவி தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு தேர்வு பெற்று சாதனை

Nambiyur Kumuda school girl gets selected for South Indian level shooting competition and achieves success

குமுதா பள்ளி மாணவி தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு தேர்வு பெற்று சாதனை

தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் கழகத்தின் சார்பாக 47வது துப்பாக்கி சுடுதல் போட்டியானது கோயம்புத்தூரில் உள்ள காவல்துறை பயிற்சி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது‌. மாநிலம் முழுவதிலும் இருந்து பல்வேறு மாணவ மாணவியர் கலந்து கொண்ட இப்போட்டியில் 14 வயதிற்கு உட்பட்ட பெண்கள் தனிநபர் பிரிவில் குமுதா பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவி S. ரிதன்யா துப்பாக்கி சுடுதலில் வெற்றி பெற்று அடுத்த மாதம் சென்னையில் நடக்க இருக்கும் தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளார். இம்மாணவி 400 க்கு 328 புள்ளிகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.சாதனை படைத்த மாணவியை குமுதா பள்ளியின் தாளாளர் திரு.K A. ஜனகரத்தினம் , துணை தாளாளர் திருமதி. சுகந்தி ஜனகரத்தினம் , செயலர் டாக்டர் J.அரவிந்தன் , இணைச் செயலர் டாக்டர்.A C. மாலினி அரவிந்தன், விளையாட்டு இயக்குநர் திரு.M.S. பாலபிரபு, முதல்வர் திருமதி. S மஞ்சுளா, துணை முதல்வர் திருமதி.K வசந்தி, ஆசிரிய ஆசிரியைகள், பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவியர் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment

மற்ற பதிவுகள்