கோபி அருகே உள்ள கலிங்கியம் காந்தி நகரில் குடும்பத்தகராறு காரணமாக பெயிண்டர் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கோபி அருகே உள்ள கலிங்கியம் காந்தி நகரை சேர்ந்தவர் காளியப்பன் மகன் குமரேசன்36 வயதான இவர் பெயிண்டராக வேலை செய்து வந்தார் இவருக்கு திருமணமாகி இந்திராணி என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர்குமரேசனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இருவருக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்படவே இந்திராணி கோபித்துக் கொண்டு அருகில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்று விட்டார்இதனால் மனமுடைந்த குமரேசன் வீட்டில் இரவு மனைவின் சேலையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து தகவல் அறிந்த கோபி போலீசார் வீட்டின் கதவை உடைத்து தற்கொலை செய்து கொண்ட குமரேசன் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.