நம்பியூர் அருகே மோளபாளையம் பகுதியில் பொதுமக்களே மின்மாற்றியில் ஏறி மின்சார துண்டிப்பை சரிசெய்யும் அவலம்

நம்பியூர் அடுத்த மோளபாளையம் பகுதியில் 200 க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இங்கு அதிக அளவில் விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது.அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்படுவதால் கால்நடைகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது இது குறித்து பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடமும் ஊழியர்களிடமும் விவசாயிகள், மற்றும் பொதுமக்கள் கூறிய போது எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை. இதனால் மின்மாற்றியில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் மின்சார துண்டிப்பை சரிசெய்யது வருகின்றனர்.மேலும் இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது.இதுகுறித்து மின்வாரிய ஊழியர்களிடம் கேட்டபோது முறையாக பதில் அளிக்க மறுப்பு தெரிவித்தனர்.