முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 101 வது பிறந்தநாளை முன்னிட்டு கோபி நகர திமுக சார்பில் 30 வார்டுகளில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 101 வது பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு வடக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கியும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோபி நகர திமுக சார்பில் 30 வார்டுகளிலும் கொடியேற்றி இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி கோபி நகர செயலாளர் என்.ஆர்.நாகராஜ் தலைமையில் மாநில விவசாய அணி இணைச்செயலாளர் கள்ளிப்பட்டி மணி முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம் கரட்டூரிலும் அதைத்தொடர்ந்து கமலா அரிசி ஆலை வீதியில் மாநில விவசாய அணி இணைச்செயலாளர் கள்ளிப்பட்டி மணி ஆகியோரும் மேட்டுவலுவில் ஈரோடு வடக்கு மாவட்ட அவைத்தலைவர் பெருமாள்சாமி ஆகியோரும் கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கினர்.
அதைத்தொடர்ந்து நகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாநில நிர்வாகி காயத்திரி சீனிவாசன், ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருவேங்கடம், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர். சுதாகர், மாவட்ட திட்ட குழு உறுப்பினரும், கோபி நகர இளைஞரணி அமைப்பாளருமான விஜய் கருப்புசாமி, மாவட்ட பிரதிநிதிகள் சவுகத் அலி, அய்யாசாமி, நகர துணைச்செயலாளர் சரோஜா, நகராட்சி கவுன்சிலர் நித்யா மெய்யழகன், வார்டு செயலாளர்கள் செந்தில்குமார், கனகராஜ், ஸ்ரீதர், சரவணன், பாலகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 101 வது பிறந்தநாளை முன்னிட்டு கோபி நகர திமுக சார்பில் 30 வார்டுகளில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

தங்க விலை 🟡 – ₹58000/ சவரன்
வெள்ளி விலை⚪ – ₹9100/100g
Source
Thangamayil Jewellers
Katcheri medu, Gobichettipalayam