சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கோபிசெட்டிபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் செவிலியர் கல்லூரி சார்பில், புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு மராத்தான்

On the occasion of International Women's Day, a private nursing college operating in Gopichettipalayam organized an awareness marathon against cancer.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கோபிசெட்டிபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் செவிலியர் கல்லூரி சார்பில், புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு மராத்தான் ஓட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகள், மாணவிகள் பங்கேற்பு…
ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்கள் எதிரான வன்கொடுமைகள், பாலியல் குற்றங்களை தடுப்பது போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
அதன் ஒரு பகுதியாக கோபிசெட்டிபாளையம் அருகே கொளப்பலூரில் செயல்பட்டு வரும் தனியார் செவிலியர் கல்லூரி சார்பில் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிங்க் மராத்தான்
ஓட்டம் நடத்தப்பட்டது.
14 வயதுக்கு உட்பட்டோர், 19 முதல் 30 வயது வரை, 30 முதல் 40 வயது வரை, 40 வயதுக்கு மேற்பட்டோர் என 4 பிரிவுகளில் நடத்தப்பட்ட மராத்தான் ஓட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகள், சிறுமிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
கல்லூரி வளாகத்தில் தொடங்கிய மராத்தான் ஓட்டம் காமராஜ் நகர், வாய்க்கால் மேடு, ஓலப்பாளையம் பிரிவு வரை சென்று மீண்டும் கல்லூரி வந்தடையும் வகையில் நடைபெற்றது.நான்கு பிரிவுகளிலும் முதல் 4 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment

மற்ற பதிவுகள்