கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் 12 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலி.

The 12-year-old boy drowned in the flagware dam near gobi

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் இன்று ஞாயிறு விடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் அணையில் குளித்து கொன்றிருந்துள்ளனர்.

அப்போது அணைக்கு வந்த சிறுவன் நீரில் தத்தளித்து கொண்டிருப்பதை கண்ட அருகில் இருந்தவர்கள் நீரில் மூழ்கிய சிறுவன் மீட்டு இருசக்கர வாகனம் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்

தொடர்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு பங்களா புதூர் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.


விசாரணையில் அந்த சிறுவன் திருப்பூர் மாவட்டம் அவிநாசி புது ஊஞ்ச பாளையம் பகுதியை சேர்ந்த ஜே.சி. பி ஓட்டுநர் வெங்கடேஷ் என்பரது மகன் வாசு என்பது தெரியவந்தது

மேலும் அந்த சிறுவன் நேற்று அம்மா திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறியதும் இன்று கோபி வந்த சிறுவன் கொடிவேரி அணைக்கு சென்று குளித்த போது நீரில் மூழ்கியதாக தெரியவந்துள்ளது

சிறுவன் காணாமல் போனதாக அவரது பெற்றோர்கள் அவனாசி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சிறுவனை தேடி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment

மற்ற பதிவுகள்