கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் ஆவின் பாலகத்திற்க்கு சித்தோடு ஆவின் பாலக தலைமை அலுவகத்திலிருந்து விற்பனைக்காக வேனில் பிஸ்கெட்கள் கொண்டுவரப்பட்டடன,

வேனில் விற்பனைக்காக கொண்டு வரும் பிஸ்கட்டுகள் காலாவதியானது என கோபி உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது,

தகவலின் பேரில் கோபி பேருந்து நிலையம் அருகே காத்திருந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரி குழந்தைவேலு அந்த வழியாக வந்த ஆவின் பாலக வேனை நிறுத்தி ஆய்வு செய்துள்ளார்.

அந்த ஆய்வில் வேனில். விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட பிஸ்கட்டுகள் காலாவதியானது என தெரியவந்தது,
அதை தொடர்ந்து காலாவதியான பிஸ்கட்டுகளை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஈரோடு உணவு பாதுகாப்பு அலுவலகத்திற்கு அனுப்பி வைத்ததாக கோபி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி குழந்தைவேலு தெரிவித்துள்ளார்
இது குறித்து கொடிவேரி பாசன விவசாய சங்க தலைவர் சுபி தளபதி (வழக்குரைஞர்) கூறுகையில்
ஈரோடு மாவட்ட ஆவின் நிர்வாகம் தொடர்ந்து ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளுக்கும் மனு அளித்ததாகவும்
சித்தோடு ஆவின் பாலகத்தில் உற்பத்தி செய்யப்படுகிற பிஸ்கட்டுகள் காலாவதி தேதி முடிந்த பிறகும் ஆவின் பாலகத்திற்கு முறைகேடாக பில் செய்து விற்பனை செய்து வருவதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் மாவட்ட ஆட்சியருக்கு இமெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் காலாவதியான பிஸ்கட்கள் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன
மேலும் காலாவதியான பிஸ்கட்டுகள் சித்தோடு ஆவின் பாலக தலைமை அலுவலகத்தில் வைத்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அவை பல்வேறு இடங்களில் விற்பனை செய்து வந்ததாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன எனவும்
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், மற்றும் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார
மேலும் இது குறித்து கோபி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி குழந்தைவேலுக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது நாளை ஆவின் பாலகத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளார் இது சம்பந்தமாக முழு அறிவிப்பை வெளியிடுவார் என அவர் தெரிவித்தார