தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் பெரும்பாலான நேரங்களில் விரல் ரேகையை பதிவு கருவி ஏற்றுக்கொள்ளாததால் பொதுமக்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்வதில் சிரமம் ஏற்படுவதை தடுக்க, தமிழக அரசு கூடுதல் வசதிகளுடன் கூடிய புதிய பி ஓ எஸ் கருவி வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது, இந்த புதிய பிஓஎஸ் கருவி நேற்று முதல் ஈரோடு மாவட்டத்தில் வழங்கப்பட்டு வந்தது,


இந்நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் இயங்கி வரும் 144 நியாய விலை கடைகளில் இன்று தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட புதிய பி ஓ எஸ் கருவி மற்றும் கருவிழி ஸ்கேன் கருவி ஆகியவை அனைத்து நியாய விலை கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது,


இந்த பிஓஎஸ் கருவி செயல்படுத்தும் முறை குறித்து பயிற்சி கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் சாலையில் அமைந்துள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கூட்ட அரங்கில் நடைபெற்றது,



இதில் சென்னை தனியார் நிறுவனத்தின் மேலாளர் சாமுவேல் என்பவர்; நியாய விலை கடை விற்பனையாளர்களுக்கு புதிதாக கொண்டு வந்துள்ள பி ஓ எஸ் கருவி செயல்படுத்தும் முறை குறித்து பயிற்சி அளித்தார்,
இந்த பயிற்சி வகுப்பில் கோபியில் செயல்பட்டு வரும் நியாய விலை கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.