கோபிசெட்டிபாளையத்தில் அரசு பள்ளி மாணவர்கள் சுமார் 250க்கும் மேற்பட்டோருக்கு விலையில்லா மிதிவண்டிகளை முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமாக கே.ஏ.செங்கோட்டையன் வழங்கி மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.


கோபிசெட்டிபாளையம் பழனியம்மாள் மற்றும் வெள்ளாங்கோயில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது,


இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு 250 க்கும் மேற்ட்ட மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கி சிறப்புறையாற்றினார்,
பின்னர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேனாக்களை வழங்கிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இனிப்புகளை வழங்கினார்.
தொடர்ந்து முன்னாள் முதல்வர்கள், காமராசர் எம்ஜிஆர் ஜெயலலிதா, உள்ளிட்டோர் கல்விக்காக கொண்டு வந்த திட்டங்கள் குறித்து மாணவ மாணவிகள் இடையே முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ செங்கோட்டையன் சிறப்புரையாற்றினார்.