நம்பியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் உடல் நிலை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர் சிகிச்சை பலனின்றி காலை 5 மணிக்கு உயிரிழந்தார்நம்பியூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக கோபியை சேர்ந்த சார்லஸ் பணியாற்றி வந்தார்.இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நிலை பாதிக்கப்பட்டது.அதைத்தொடர்ந்து மூளை நரம்பும் பாதிக்கப்பட்ட நிலையில் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை 5 மணிக்கு உயிரிழந்தார்அதைத்தொடர்ந்து அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட உடலுக்கு காவல்துறையினர் இறுதி மரியாதையும் அஞ்சலியும் செலுத்தினர்.உயிரிழந்த உதவி ஆய்வாளர் சார்லசுக்கு ஜெயந்தி என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனர்.