நம்பியூர் கடந்த 30 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவர்கள்; பள்ளியில் மாணவர்கள் மிதிவண்டிகள் நிறுத்துமிடத்திற்க்கு ரூ.3 லட்சம் மதிப்பில் மேற்கூரையினை அமைத்து கொடுத்தனர்.



கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1992- 1993பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது.


சிறப்பு விருந்தினர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் முன்னாள் மாணவர்கள் அனைவரும் முன் நின்று அனைவரையும் வரவேற்றனர்.
இதில் முன்னாள் மாணவர்கள் அனைவரும் சேர்ந்து மரம் நடும் விழா நடைபெற்றது.


இதில் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் அனைவரும் குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.


இந்த பள்ளியில் கடந்த 1992 – 1993 ம் ஆண்டு 12ஆம் வகுப்பில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் பயின்றுள்ளார். அவர்கள் பள்ளிப் பருவம் முடித்து வெவ்வேறு பகுதிகளில் வசித்து வரும் நிலையில் 30 வருடங்களுக்கு பிறகு நம்பியூர் மேல்நிலைப் பள்ளி மாணவர்களை ஒருங்கிணைத்து விழா எடுக்க முன்னாள் மாணவர்கள் கடந்த மூன்று மாதங்களாக ஏற்பாடு செய்து வந்தார்


இந்த நிலையில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நம்பியூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் 30 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் படித்து கோவை, திருப்பூர், வேலூர்,சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் முன்னாள் மாணவர்கள்,தங்களுடைய மகன், மகள், பேரன் பேத்திகள் என குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.


விழாவில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் தங்கள் பள்ளி பருவத்தில் நடந்த நிகழ்வுகளை ஒவ்வொருவராக நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
பின்னர் நம்பியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் பயன்படுத்தி வரும் மிதிவண்டிகள் நிறுத்துமிடத்திற்க்கு ரூ.3 லட்சம் மதிப்பில் மேற்கூரையினை அமைத்து கொடுத்துள்ளனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் ராமசாமி, சீனிவாசன், ரங்கநாதன், அய்யாசாமி, கோவிந்தசாமி, பொன்வேல், ஈஸ்வரமூர்த்தி, குப்புசாமி, நந்தகுமார்,பெரியசாமி,தணிகாசலம்உள்பட பலர் செய்திருந்தனர்.
நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.