

நம்பியூர் அடுத்த எலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மற்றும் அவரது மனைவி ருக்குமணி ஆகியோர் அருகில் உள்ள செட்டியம்பதி பகுதியில் கருங்காலி அம்மன் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு வெடி பொருட்கள் தயாரித்து வரும் குடோன் 2019 முதல் உரிமம் பெற்று செயல்பட்டு வருகிறது.இதன் உரிமம் கடந்த 2022 ஆம் ஆண்டு முடிவற்றது அதன் பிறகு உரிமைத்தை புதுப்பிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார் இந்த நிலையில் கடந்த 1 ஆண்டுக்கு மேலாக உரிமம் புதுப்பிக்காமல் 5 நபர்களை வைத்து தொடர்ந்து பட்டாசு வெடிப்பொருட்களை தயாரித்து வந்துள்ளார்
இது குறித்து தகவல் அறிந்த நம்பியூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பட்டாசு குடோனின் உரிமையாளர் பழனிச்சாமி மற்றும் ருக்மணி ஆகிய இருவரை கைது செய்து குடோனில் இருந்த 400க்கும் மேற்பட்ட பட்டாசு வெடிகள் 700க்கும் மேற்பட்ட வானவெடிகள் மற்றும் 2 கிலோ பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் வெடி மருந்து ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து நம்பியூர் காவல்துறையினர் இருவரை கைது செய்து விசாரணை மேற்க்கொண்டுள்ளனர்.