கோபிசெட்டிபாளையத்தில் ஈரோடு மேற்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி இளைஞர் அணி சார்பில் போதை பொருட்களுக்கு எதிரான நடைபெற்ற இருசக்கரவாகன பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


கோபிசெட்டிபாளையத்தில் ஈரோடு மேற்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் போதை பொருட்களுக்கு எதிரான இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.


இந்த பேரணி கோபி ஈத்கா பள்ளிவாசல் வளாகத்தில் துவங்கி மார்க்கெட் எம்ஜிஆர் சிலை கச்சேரி மேடு, நல்லகவுண்டன்பாளையம், கரட்டடிபாளையம் வரை சென்று மீண்டும் கோபி சிக்னல் வழியாக மொடச்சூர் சாலையில் உள்ள தனியார் அரங்கு அருகே நிறைவடைந்தது.


இந்த வாகன பேரணியில் மனிதநேய மக்கள் கட்சி இளைஞர் அணியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு போதை பொருட்களுக்கு எதிரான பதாகைகளை கையில் ஏந்தி இரு சக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.தொடர்ந்து மொடச்சூர் சாலையில் உள்ள தனியார் திரையரங்கு அருகே போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.