
டாஸ்மாக் ஊழலை கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடத்த இருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து கோபி பேருந்து நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் சாலை மறியல் போராட்டம்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கோபி காவல்துறையினர் கைது செய்தனர்தமிழ்நாட்டில் அரசு மதுக்கடைகளை நடத்தும் டாஸ்மாக் நிறுவனத்திலும், மது ஆலைகளிலும் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.1,000 கோடி அளவுக்கு ஊழல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.இந்த நிலையில் ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, தமிழக பா.ஜ.க. சார்பில் இன்று சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலக முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையை அடுத்த அக்கரையில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டுள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் கைதை கண்டித்து தமிழக முழுவதும் பாஜகவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோபி பேருந்து நிலையம் முன்பு பாஜகவைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கோபி காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.